Tuesday, December 3, 2013

கண்துடைக்கும் இந்தியா

பூமுகன்

ஈழத்தமிழர் விடயத்தில் அயல்நாடு என்றவகையில் இந்தியா காலத்துக்குகாலம் தவறையே செய்துவந்திருக்கிறது.அதுமட்டுமல்லாமல்
தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.

Sunday, December 1, 2013

காற்றோடு பறந்த கதைகள்



இந்த வருடத்தின் கார்த்திகை இறுதிநாள்கள் சற்று அமைதியாகவும் அற்புத மாகவும் கடந்திருக்கின்றன.வடபகுதியில் ஏதோ செய்யப்போகிறார்கள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்று  விசேடமாகப் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளும் வீணாகிப்போயுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சம்பவங்களைத்தவிர மேலதிக பிரச்சினைகள் எவையும் உற்பத்தியாகவில்லை. ஆனால் உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நினைவேந் தல்கள் நடந்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க இம் முறை மிகவும் உணர்வுபூர்வமாகவே மக்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இராணுவக்குவிப்பு, பொலிஸ் பாதுகாப்பு என்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கையில் இராணுவக் காவலரணில்கூட  தீபம் ஒளிவிட்டுபிரகாசித்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் துயிலு மில்லங்களுக்கு அருகில், அழிக்கப்பட்ட கல்லறை எச்சங்களை எடுத்து சேர்த்த மக்கள் அவற்றுக்கும் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர்.

வீடுகள் தோறும் தம்பிள்ளைகளுக் காக அஞ்சலிக்காத எவரும் இருந்தி ருக்க வாய்ப்பில்லை. வலைத்தளங் கள் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளைத் தாங்கி மலர்ந்திருந்தன.பேஸ்புக்கில் தீபங்கள் இப்போதும் ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அடக்குதல் சாத்தியமற்றது
அராஜகரீதியிலான அடக்குதல் சாத்தி யமற்றது என்பதை அரசு புரிந்து கொள்ளத் தயாரில்லை.புலிகள் - பயங்கரவாதம் என்ற சொற்களை மறந்து விட்டு பீதியற்ற இலங்கை குறித்து சிந்திக்க அரசு இன்னமும் துணியவில்லை. புலிகள் குறித்தும் அவர்களது தாக்குதல் உத்திகள் குறித்தும் இன்னமும் அது கண் விழித்து கனவுகண்டபடியே இருக்கிறது. இதன்காரணமாகவே தமிழ் மக்களது பொது நிகழ்வுகளுக்கு தடை போட்டு அவர்களது பாரம்பரியங்களை தடைசெய்ய முயற்சிக்கிறது. இறந்தோர் மற்றும் நடுகல் வழிபாடுகளுக்கு கூட  அரசு தடைவிதித் துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இது பச்சைக் குழந்தையை காரணம் தெரியாமல் தாக்குவது போன்றது. அதாவது ஒரு குழந்தை ஏதும் அறியாப்பருவத்தில் ஒரு கெட்டவார்த்தையை தவறுதலாக உச்சரித்தால் அதை நிறுத்துமாறுகூறி நாம் தண்டிப்பதில் பயன் இருக்காது. அப்படி தண்டித்தால்  தான் கூறுவதில் ஏதோ விடயம் இருக்கிறது என்று அந்த குழந்தை தொடர்ந்து கூற முற்படும்.  அடக்கமுறையும் அப்படிப்பட்டதே.

அடக்குமுறை  பின்னாளில் உடைப்புகளைத் தோற்றுவிக்கவல்லது. விடுத லைப்போராட்டம் வளர்வதற்கு அடக்குமுறையே காரணமாக இருந்தது என்பதை இன்றைய ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை.

போரால்பேரழிவு ஏற்பட்டது என்றால் அதற்கு முழுப்பொறுப்பாளிகளும் சிங்களத் தலைவர்களே.அதே தவறு களையே மீண்டும் ஏற்படுத்த தென் னிலங்கை சக்திகள் விரும்புகின்றன.

உரிமைகளைக் கேட்பது தவறல்ல
ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் மக்கள் தமது உரிமைகளைக் கேட்பது தவறாகாது. வாழிடம்,பண்பாடு, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்கு ஒரு இனத்துவ சமூகத்துக்கு உரிமை இருக்கிறது.இது ஜனநாயக நாடொன்றில் இருக்கும் உரிமை. அப்படியான சகல உரிமைகளையும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் கேட்பது நியாயமானதே.

இலங்கை அரசு தன்னை ஜனநாயக அரசாகக் காட்டும் வரை இத்தனை உணர்வுகளையும் மதித்தாகவேண் டும். இது சர்வதேச நியதி.ஆனால் இலங்கை நடைமுறையில் ஜனநாய கப்பண்புகளைக் கொண்டிருக் கிறதா? அது தனது நாட்டுமக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக் கிறது ?  என்ற நிலையில் இறுக்கமான-வியத்தகு விடைகள் வெளிப்படலாம்.
ஆகையால் தமிழ்மக்கள் கோரும் உரிமைகளுக்கும் பதில்கள் இன்ன மும் மர்மாமாகவே தொடர்கின்றன. 

பரப்புரை மேடைகள்
வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப் பட்ட காலத்தில்  பரப்புரைமேடைகள் போர்க் களமாகின.அரசதரப்பு கட்சிகளும் எதிர்தரப்பு கட்சிகளும் வறட்சிக்கால இடிமின்னல்களாக மின்னி  முழங்கின.

எல்லாக்கருத்துக்ககளையும் சலவை செய்து பார்த்தால் எவற்றிலும் அழுக்கில்லை.அப்படியே தூய்மையாக மறைந்துவிட்டன.கிளிநொச்சி மாவட்டத்தில் அரசதரப்பு வேட்பாளர் ஒருவர் "" நான் மாவீரர் துயிலுமில் லத்தை மீள நிறுவ அனுமதிபெறு வேன்''என்று சூளுரைத்தார்.பாவம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கமுன்வரவில்லை.ஏனோ தெரியவில்லை. (ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் சில வேளைகளில் கடந்த 27ஆம் திகதி நாம் எல்லோரும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் சென்று மாவீரர் களை வணங்கியிருக்கலா மல்லவா?)

பொய்கூறி பிச்சைஎடுத்தல்
பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களின் வாக்குக்களை பிச்சைஎடுப்பது தவறானது என்பதை அரசியலுக்கு வரவிரும்புபவர்களும் வந்து வாலறுந்து நிற்பவர்களும் புரிந்தாக வேண்டும். அதுபோக நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து மக்களை ஏமாற்றுவது மிகமோசமானது.

வடமாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட அனைவரும் பரப்புரை மேடைகளில் முழங்கியதற்கு மாறுபாடாகவே செயற்பட்டுவருக்கின்றனர். அதற்கான காரணங்கள் மாகாண சபைக்குள்ள அதிகாரங்களை விளங்கிக்கொள்பவர்களுக்கு புரியும். வெளியில் கூட்டமைப்பு குறித்த விமர்சனங்கள் பலவாறாக இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை வேறுபாடே இதற்கு காரணமாக உள்ளது. அதை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.இன்றைய தேவை கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென்றே   தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு முடிவை எடுத்து அறிவிப்பதற்கிடையில் வரும் மறுதலைக் கருத்துக்கள் அந்த முடிவையே கேள்விக் குறியாக்கிவிடுகின்றன. இதுதான் கூட்டமைப்புக்கு சாபக்கேடாக இருக்கிறது. நாடாளுமன்றில் ஒரு உறுப்பினர் உரை நிகழ்த்த அதை இன்னொருவர் கொச்சைப்படுத்து வது அநாகரிகமானதே.

மக்கள் கொண்டாடுவர்
எந்த எதிர்ப்பையும் சந்தித்து தமது உரிமைக்காகப் போராடவும்,தமது விழுமியங்களைக் கொண்டாடவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவவேண்டியது தமிழ் தலைவர்களது பொறுப்பாகும்.

தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போராட்டங்களில் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆர்வத்தடன் கலந்துகொள்கின் றனர்.ஆனால் ஓரிரு அரசியல் தலைவர்களைத்தவிர பலரின் முகங்களை இதன்போது காணவே முடிவதில்லை. இந்த நிலைமையும் மாற்றப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மாளிகைச் சந்திப்புக்களை மட்டும் நடத்தாது மக்களோடு சேர்ந்து களத்திலும் குரல் கொடுக்கவேண்டும்.

இனிவரும் நாள்களும் போராட்ட நாள்களே.வடக்கு  மாகாண சபை இன்னமும் மக்கள் மயப்பட வில்லை. அது அரசியல் மேலாதிக்கத்துடனேயே தொழிற்படுகிறது. சபை உறுப்பினர்களுக்காக அதிகாரங்கள் எவை என்றே தெரியவில்லையாம். விரைந்து பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இதன் மூலமே மக்கள்மயப்பட்ட நிர்வாகத்தை இயக்கமுடியும். அதை விட இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினைக்காக நியாயமான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.

''விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு மாவீரன். இதில் எந்த ஐயப்படுகளும் இல்லை''  என்றால் அந்த விடுதலை வீரனின் படத்தை வடமாகாண சபையில் தொங்கவிடுங்கள்.அப்போதாவது அங்கு வீரம் பிறக்கட்டும்.

நன்றி சூரியகாந்தி 01.12.2013

Wednesday, November 27, 2013

கனவு மெய்ப்பட

விழிநீர் சொரிந்து
வளி(ழி) நெடுக்கும்
விளக்கேற்றினோம்

சப்பாத்துகால்களால்
ஏறிமிதித்தனர்
கடந்துபோனவருடத்தில்


ஓயோம் உணர்வு
விட்டகலோம்
சாயோம் ஒளிபடு
பொழுதில் விளக்கேற்றாமல்-என்று
அப்பொழுதில் உறுதியெடுத்தோம்
அடுத்தவருடத்துக்காய்

வருடம் பிறந்து
கார்த்திகை உருண்டது
நஞ்சுக்கிழங்கு
மண்பிளந்தது

கருமேகம் கூடிவரும்
காவலர்கள் நாளதனில்
இருநிறத்தாள் இதழ் எடுத்து
சாத்திஒரு சத்தியம் செய்தோம்

விலங்கொடிய எம்
இனம்வாழவளிதந்த
வேங்கைகளே நாம் மறவோம்

வீரவரலாறுகொண்டு
வெல்வோம் விதைத்தவர்கனவு
மெய்ப்பட ஈழமதில்வாழ்வோம்!

Sunday, November 24, 2013

சுடர் ஒளிரும்


பச்சை மிருகங்களின்
ஆக்கிரமிப்புக்கள் வீதிகளில்
பயந்து முன்னேறுகின்றன
சனங்களின் வாகனங்கள்

சொச்ச இடமெலாம்
மிச்சம் இன்றி தேடும் பகை
கொச்சைப்படுத்தவென்று
கச்சை கட்டிநிற்கிறது

பல்கலை பக்கம் பயன் பொருட்டும்
செல்லமுடியாக் கொல்லைகள் -தினம்
தொல்லை தரவல்ல துரோக கும்பல்
கெல்மெட்டுடன் ஊர்சுற்றிவருகின்றன

இருபத்து ஏழில் ஒருமித்து மனங்கள்
சுடர் ஏற்றத் தயாராகி விட்டன -
இடர்வரினும் சுடர் ஒளிரும்
தடைவரினும் தாகம் தீரும்

பூமுகன் 25.11.2013

Monday, November 18, 2013

படுவீர் துயரம்


நாங்கள் வளர்த்த கிளிப்பிள்ளை -அவள்
பெண்புலிப் பிள்ளைதான்
சுடு கலன் ஏந்தா  போராளி!

பேனா முனை எடுத்து -அவள்
ஆனான பிரச்சினைகள்
அத்தனையும் பேசியவள்

குறும்படம் எடுத்து - அவள்
நெடும்வழி சென்று
அறவழிப் போராடினாள்

துயிலறைக் காவியங்களை - அவள்
துலக்கமாய்  படைத்து
மாவீரர் புகழ்பாடினாள்

தொலைக்காட்சி முன்தோன்றி - அவள்
தொகுப்பளினியுமாகி
தொடர்ந்தாள், சேதி சொன்னாள்

குணக் குன்று - அவள்
குடும்பியில் பிடித்தனர் கோழைகள்
குருதியில் கிடந்தாள்

குருதியில் கிடந்த - அவள்
குவலயம்  பார்த்தது
குட்டு வெளிப்பட்டது படுவீர் துயரம்

பூமுகன்(19.11.2013 am 2.51)

காந்தள் பூ



கார்திகை உருண்டு மறைகையில்
எங்சியிருக்கும் இறுதி நாட்கள்
எங்கள் மறவர்களுக்கானவை!

இடித்தழிக்கப்பட்ட கல்லறை -
பயிர்கள் மெல்ல முளையூன்றி
சிவப்பு மஞ்சளாய் ஒளிர்விடும்!

சிறு பனிமழைதூவி அவை
முளைத்து வெளிவர வழி -
தேடி கருமுகில் ஒன்றுகூடும்!

தனிமையில் இருந்து தாய் -
அழுகையில் ஒருமலர்
நிறவண்ணமாய் சாந்திகூறும்!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
வறள்பாதிவெயிலில் காந்து மீண்டெழும்
வர்ணத்தாள் மலர்நான் சொல்கிறேன்!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
என் நிறமெடுத்து சாத்து
உன்விழிநீர் விலக்கி விளக்கேற்று!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
வறள்பாதிவெயிலில் காந்து மீண்டெழும்
வர்ணத்தாள் மலர்நான் சொல்கிறேன்!

பூமுகன் (19.11.2013 am 1.00)

Sunday, November 17, 2013

உள்ளே போர் வெளியே படம்


வட மாகாண சபை  மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது.  தவறுகள், தடு மாற்றங்கள், பயம், வெட்கம்,  என்று ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போல இந்த ஆரம்பம் தெரிகிறது. 
மேடைகளில் ஆவேசப் பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிக் கருத்துக்களும் கொட்டி முழங்க செப்ரெம்பர் மாதமே வடக்கில்  தமிழ் அரசு முழு அதிகாரங் களுடன்  கொடி கட்டிப்பறக்க போவதாய்தென்பட்டது.

ஆனாலும்  தமிழ் மக்கள் இவற்றுக்காக வாக்களிக்கவில்லை. ஏனென்றால் காலம் காலமாக  கண்டுவந்த அரசியலே இன்றும் நிகழ்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால்  அவர்கள்  உணர்ச்சி அரசியலுக்கு அப் பால்  தமது   நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே முன்வந்தனர். 

அதில் முதலாவது மஹிந்த அரசின் மீது அதிருப்தி  அடுத்தது சர்வதேசத்துக்கு தமது பிரச்சினை எடுத்தி இயம்பப்பட வேண்டும் என்ற விருப்பு.  
இதற்கான தனித்தெரிவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது. ஆனாலும் "தமக்குள்ளே  அடிபடுபவர்களை'' தலைவர்களாக்கி நெடுநாள் பிரச்சிணைக்கு தீர்வு கண்டுவிட முடியும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. 
இன்னும் மஹிந்த அரசின் மீதான கோபம் தமிழ் மக்களுக்கு கூடிக் கொண்டே செல்கிறது. ஆகையால் அந்த கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர். 
இவை ஒருபுறமிருக்க தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக் குறியாகிக் கொண்டு செல்வதை தமிழ் மக்களே உணருகின்றனர். 

இதற்காக தமது இருப்பு குறித்து குரல்கொடுக்கக்கூடிய  சக்தியொன்றை உருவாக்க அல்லது தேடிக்கொள்ள தமிழ் மக்கள் தலைப்படுகின்றனர். ஆனாலும்  அதில் அவர்களுக்கு திருப்தியில்லை. எப்படியிருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட தமிழ் மக்களுக்கு மாற்றுத் தெரிவு இப்போதைக்கு இல்லை என்ற அடிப்படையில் வட மாகாண சபைக்கு அவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவெடுத்தனர்.  இதற்காக அவர்கள்   தமது வாக்குகளை பயன்படுத்தி கூட்டமைப்பை மாகாண சபைக்கு அனுப்பி வைத்தனர். 

பதவிச் சண்டை
மாகாண சபை தெரிவு செய்யப்பட் டதும் பதவிக்காக பலர் படாதபாடுபட்டனர். பதவியேற்பதற்கு பாசாங்கு செய்தனர்  ஒற்றுமையைக் குலைத்து ஒவ்வொரு மூலையில் நின்று கொண்டு தமிழ் அரசை இயக்கு வது எப்படி என்ற கேள்விக்குறியை ஆரம்பத்திலே இட்டுவைத்தனர். இன்றுவரை  எதோ ஒரு வகையில்  உள் வீட்டுச் சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

கன்னியமர்வு கழிந்தது
ஒருவாறாக சண்டை சச்சரவுகள்ஓய  தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வட மாகாண சபையில் கன்னியமர்வு நடை பெற்று முடிந்தது. அமைச்சுகள்  அமைச்சுப் பொறுப்புகள்  பகிர்ந்தளிக்கப்பட  ஓரள வுக்கு  நிம்மதி எற்பட்டது.  வட மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரம் தேர் தல் பரப்புரை மேடைகளில் முழுங்கிய தைப் போல் அல்லாமல் அதிலி ருந்து முற்றாக மாறுபட்டு இருக் கிறது என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர். ஆனாலும் இருக்கக் கூடிய அதிகாரங்களைக் கூட தெரிந்துகொண்டு பயன் படுத்த மாகாண சபை அங்கத்தவர்கள் தயாராக இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தீரவில்லை பிரச்சினை
தமக்கு வாகனங்கள் ஒதுக் கப்படவில்லை, தமக் கான பணிகள் வரையறுக்கப் படவில்லை. என்று சபை அமர்வுகளில் சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்பதையும் உறுப்பினர் கள் நிறுத்தவில்லை. சொல்லப்போனால் இவர் கள் அனைவரும் தாங்கள் அரச உத்தியோகத்தில் அமர்த்தப்பட்டி ருப்பது போல எண்ணிக் கொள் கின்றனர் என வரையறுக் கலாம். காரணம்  மக்கள் பணி இவற்றில் இருந்து வேறுபட்டது என்பதே. 

ஆளுநர் வேண்டாம் 
வடக்கில் வட மாகாண சபை தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் கைகளில் வந் ததும் ஏற்கனவே இயங் கிக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியான  ஆளுநரை வீட் டுக்கு அனுப்ப வேண்டும்  என பறை சாற்றப்பட்டது. இதற்கு தென்பகுதி யில் இருந்து ஆதரவு‡ எதிர்க்கருத் துகள் கிளம்பின. 

உள்ளே எதிர்ப்பு வெளியே படம் 
சபையின் முதலாவது  உத்தியோ கபூர்வ அமர்வு கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் இராணுவ ஆளுநரை மாற்ற வேண்டும் என்று  தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  ஆனாலும்  அதற்கு முன்னரே  ஆளுநரின் அடாவடி விடைபெறுவது உறுதி யாகிவிட்டது.         அமர்வுக்கு  ஆளுநர் வந்திருந்தார். அவருக்கு வரவேற்பு அமோகமாக இருந்தது. 
பொலிஸ் அணிவகுப்பு மரியாதை மாகாண அதிகாரம் பரவ லாக் கப்பட்டதை அறிவிப்பதாய் இருந் தது. ஆனால் அதில் ஒன்றுமில்லை என்பது தெரிந்ததே. 
உள்ளே  ஆளுநருக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தோட ஆளுநரின் உரையை சிலர் புறக்கணித்திருந்தனர். 
ஆனால் ஆளுநர் விடைபெறுகிறார் என்ற கவலை, அவருக்கு  மரியாதை வழங்கி வழியனுப்பும் விருந்தோம்பல். விருந்து வெளியே வைக்கப்பட்டது. வெளியில் சபை உறுப்பினர்கள் ஒரு சிலர் தவிர  மீதிப்பேர் ஆளுநரை இருத்தி வைத்து ஞாபகத்திற்கு குழுப் படமும் எடுத்துக் கொண்டனர்.

கன்னிகளின் தடுமாற்றம்
கடந்த கன்னியமர்வில் உரை யாற்ற சந்தர்ப்பம் கிடைக்காத நபர்களுக்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் கிடைத்தது. தட்டுத் தடுமாறி  தமிழ் பேசினர் அவர்கள்.பயம் வெட்கம், என்று எதோ  இவர்களை பீடித்திருக்க வேண்டும். அதனால் தான்  அவர்களுக்கு  அந்த  நடுக் கம் ஏற்பட்டு இருக்கிறது.

சிரிக்க வைத்த எதிரணி
வவுனியா மாவட்டத்தில் வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப் பட்ட எதிரணி உறுப்பினர் ஒருவர் உரையாற்ற  ஆரம்பித்தார்.  சிங்கள  இனத்தவராகினும் அவர்  நல்ல தமிழில்  உரையாற்றினார். ஆனால்  அவரது உரை  தமிழ் மக்களை எள்ளிநகையாடுவதாக இருந்தது. அதை ஆளும்தரப்பு உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர். 
"வட மாகாண சபை உறுப்பினர்  தனக்கு உதவுவார் என  நம்பி வந்த  ஏழ்மைப் பெண்ணை நகைச் சுவையாகப் பேசி  நான் அனுப்பினேன்'' என்பது  அவரது உரை.
"ஐயா வீடு ஒழுகிறது. உறங்குவதற்கு இடமில்லை. ஏதாவது உதவி செய்யுங்கள்''  இதுதான் அந்தப் பெண்ணின் வேண்டு கோள். அதற்கு இவர் கூறியிருகிறார். 
"ஒழுக்குக்கு சட்டி வையுங்கோ.  மழை நீரையும் சேமிக்கலாம் பாத் திரங்களும் கழுவப்படும்.'' என்று 
உண்மையில்  மழைகாலத்தில்  எத்த னையோ குடும்பங்களின் வாழ்வு இப்படித் தான்  கழிந்து கொண்டு தான்இருக்கிறது.  வீடு என்ற அடிப்படை வசதியின்றி ஒழுக்குக்கு பாத்திரம் வைத்து விட்டு நடு ராத்திரியில் கண் மூடாது விழித்திருக்கும் மக்களுக்கு பொறுப்புள்ள அதிகாரிகள் சொல்லியனுப்பும் பதிலா இது.  குறித்த உறுப்பினர் உண்மையில் நகைச் சுவையா பேசியிருந்தாலும்கூட இப்படித்தான் நிலைமை இருக்கிறது; இருக்கும் என்பது  வேதனையளிக்கிறது. 

பேச மறந்த விடயங்கள் 
வடக்கு மாகாண சபை  தமிழ் மக்களது  வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி  ஏற்பட்டுள்ள, ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்க்கும் என்ற எதிர்பார்ப்பு தவிர்க்க முடியாதது. காரணம் கடந்த முப்பது வருட போராட்டம் தமிழ் மக்களுக்கு மீதியாய் விட்டு சென்றவை அழிவுகளும்  ஆபத் துக்களையுமே. இந்த  நெருக் கடியான  நிலையில் இருந்து  வெளிவருவதற்கு உரிமை சாரா தேவைகளின் ஒன்றாக  அபிவி ருத்தி  முக்கியமாகிறது.  எனவே மக்கள் தேவைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண் டியது மாகாண சபையின்  கடமையாகிறது.  குறிப் பாக  இழந்த நிலத்தையும் உரி மைகளையும் சிங்கள தேசத்தி டமிருந்து மீளப்பெறுவதற்கு முன்னர் இருக்கும் இடத்தில் தமிழன்  ஒருநிலைப்பட்டாக வேண்டியிருக்கிறது. வாழ்வியலை மேம் படுத்த வேண்டியிருக்கிறது. 
தற்போது தமிழனுக்கு இருக்கும் நிலமும் பறிபோகும் அபாயமே ஏற்பட்டு இருக்கிறது. இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை விழுங்க  ஆரம்பித்து இருக்கிறது. 

எனவே  இந்த ஆபத்தில் இருந்து  தமிழ் மக்களைக்காக்க வேண்டிய பொறுப்பும் வட மாகாண சபைக்கு தவிர்க்க முடியாதது. ஆனால் கடந்த கூட்டத்திலும்  தமிழ் மக்களின் அநேகமான பிரச்சினைகள்  பேசப்பட வேயில்லை. இது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கிறது.  

ஆளுநருக்கு வக்காலத்து   
அன்றைய கூட்டத்தில்  ஆளுநர் வடக்கில் மீள் குடியேற்றம் முற்றுப் பெற்று விட்டது என்று கருத்து தெரிவித்திருந்தார். 
அகதி முகாம்கள் இயங்குகின்றன. வாடகை வீடுகளில் இன்னமும் இடம் பெயர்ந்தோர் வாழ்கின்றனர்.  பல கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயங் களாக படையினர் வசம் உள்ளன.  தம்மை மீள்குடியேற்றுமாறு மக்கள்  வீதிகளில் இறங்கி தினமும் போராடுகின் றனர்.  தமது காணிகளை மீட்டுத்  தருமாறு நீதி மன்றங்களில்  நீதி கேட்கின்றனர்.

இவையயல்லாம்  நடந்து கொண்டிருக் கையில்  மீள் குடியேற்றம் முற்றுப் பெற்றது என  ஆளுநர் அறிக்கையிட என்ன அருகதை யிருக்கிறது. போதாக் குறைக்கு  ஆளுநர் சொன்ன கதை அனைத் தும் உண்மை என்று  வாக்காலத்து அறிக்கை விடு கின்றனர் அவர்சார்பு  அரசியல்வாதிகள். 

பொறுமைதான்  பொருத்தமோ?
மாகாண சபையில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை பேசப்படவில்லை என எழுந்து இருக்கும் குற்றச்சாட்டுக்கு சபையைச் சார்ந்தவர்கள்  அவசரம் ஆபத்தானது என  கருத்து தெரிவிக் கக்கூடும்.  ஆற அமர யோசித்து  பொறுமையுடன்  செயலாற் றினால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என இருப்பது தற் காலத்துக்கு  பொருத்தமானதாகாது.
மேடைகளில் முழங்கிய வேகம் தணிந்துவிட்டது. பேசிய பேச்செல்லாம் மறந்தாயிற்று. இப்படி இருக்கையில்  ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவு எப்படி இருக்குமோ என்பது  கேள்விக் குறியே.  இதுவே மக்கள் ஐயத்துக்கு காரணமாகவும் இருக்கிறது.  

ஒரு நிலைப்படுதல்
மாகாண சபையில் அங்கம் வகிக்கும்  ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் எதி ரணி உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.  அரசியல் எதிர்காலத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி  குழப்பி தமிழ் மக்களது  ஏகோபித்த ஆதரவை கேள்விக்குறியாக்க முயலக்கூடாது. 
மக்கள் ஒற்றுமையுடன் வாக்களித்தனர்  கூட்டமைப்புத்  தேர்தல்  பரப்புரைக்கு போகாத இடங்களில் கூட  கூட்டமைப் பினருக்கே  வாக்களிக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே  அந்த ஒற் றுமையையும் உணர்வையும் மதித்து  மாகாண உறுப்பினர் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். 
குற்றச்சாட்டுக்கள்  குறை  நிறைகள்  எந்தக் காரியத்திற்கும் பொதுவா னவை அதற்காக  ""இவர்கள் எப்பவுமே இப்படித்தான் '' என்று குறை நிறைகளை அலட்சியம் செய்யக் கூடாது. அவை  ஆராயப்பட வேண்டும். கருத்தில் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலமே சிறந்த மக்கள் சேவையை மாகாண சபை நிர்வாகத்தின் ஊடாக வழங்க முடியும்.  

வீகேஎம் ( நன்றி- சூரியகாந்தி 17.11.2013 )