Tuesday, May 12, 2009

உயிருள்ள பிணங்கள்




நான் கண்ட கனவு முடிந்துவிட்டது
நேற்றோடு-இன்று வெறுமையால்
புலம்பித்திரிகின்றேன்.தினமும்
கூடவே இறந்துகிடக்கும் தென்னை
மரமும் இடையில் நசிந்த
உடல்களும் சாலையில்
தேங்கிக்கிடக்கின்றன்.

பருத்த யானைகளையும் நாற்
படை வீரர்களையும் தள்ளிக்கொண்டு
குருதி ஆறுகள் புறப்பட்டன-பரணியில்.
இன்று தமிழனின் வரலாற்றைத்
தள்ளிக்கொண்டு வருகின்றன
சர்வதேச சேற்று ஆறுகள்-

இதுவரை கனவு கண்ட எதிரி
கண்களைத்துடைத்தபடி
நிழல்களின்பின் நடக்கின்றான்
முறிந்த பனையும் எரிந்த வயலும் அவனை
ஆழைக்கிறன அழிவின் வழிநோக்கி
உயிருள்ள பிணங்கள் ஊருக்குள் இப்போ

கொம்புகளைப் பெற்றுவிட்டன.
குதிரைகள் மண்ணை ஏந்தியபடி
சார்க் நாடுகள் விலகின்
குதிரைகளுக்கு கொம்பேது
கோம்பில் மண்ஏது!தமிழ்குருதி;
ஆறாக்கப்பட்டுவிட்டன அதில்
ஆடித்துச்செல்லபடுபவை
ஆயல்நாட்டு கறுப்புமுகங்கள்!

இன்றும் கனவு வரும் அது
நனவாகும் என்றெண்ணித் தூங்கினேன்.
மனித வாழ்வும் மரணச் சடங்குகளும்
மரண ஓலங்களும் வீதியில்
நடப்பதை எண்ணியபடியே!
வெறுமையாக்கப்பட்ட மனதில்
காலையில் ஏதோ ஒரு
கதை சேர்க்கப்பட்டதை உணர்ந்தேன்.
இரும்பு மழைகளி;ல் நனைந்தபடி
வெகு தூரம் நடந்து சென்று
வேளை உணவருந்தியபின்
வுpசாரணைக் கலைஞர்களின் சந்திப்புக்கள்
நிகழ்ந்தன. விடியவே நீதுபதியும் அவர்களே!

தாயின் கண்முன் வேடிக்கயாக
ஆழைத்துச்செல்லப்பட்ட மகள்
பல மிருகங்கள் மத்தியில்
காட்சிக்கு வைக்கப்பட்டாள் பல
கைகள் மாறியபின் முகாமிற்குள்
தாயின் கண்முன் வெற்றுடலாக

இரும்பை ஏந்தியே பழகிய கைகள்
போலி முகங்கள் என்றபின்னும்
வாலை ஒடுக்கியபடி அதற்குள்
மண்டியிடவேண்டுமா?இன்னும்கனவுகள்
எனக்குள் வரத்தான் செய்கிறது.
தேக்கிவைக்க இடமில்லை மனதில்.

ஆழிக்கப்படும் அடையாழங்களும்
ஆழிந்த உறவுகளும் மனதில்
கனவை முடித்துக்கொண்டு நான்
போகவேண்டியிருந்தது மனவள
ஆலோசனைக்கு ஊமை நெஞ்சுடன்….

சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்ட தலைகள்.



நிலவிரிப்பின் கீழ் நின்மதிப் பெருமூச்சு
செலவில்லாது போக்கு வரத்துச்செய்ய
சிறு தூரமாகிவிட்டது எம் நிலம்-நேற்று நாம்
இருந்தஇடத்தில் வெடிகணைச்செலுத்திகள்
வந்து குடியேறி எமது இருப்பிடத்தை
பார்த்து விச எச்சியை துப்புகின்றன.
பீரங்கிகள். சன்னங்கள் தமிழ் உடல்களை
கிழித்துக்கொண்டு வேறு உடலடகளை தேடுகின்றன

கிடங்குகளிற்குள் இருந்து கிளம்பிய தலைகள்
சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்டன தாயின்
முலையில் முட்டிக்கொண்டிருந்த பிஞ்சு
குழந்தையின் குடல்கள் வேலியில் மாலையய்
வீற்றிருக்கின்றன –குழந்தை பேசுகிறது
சமாதானம்பற்றி அது அனுபவித்துவிட்டதால்-ஆனால்
அயல்நாடுகள் குழந்தை பிறக்குமுன்னே
கொன்று விடு என்று முதுகில் தட்டிக் கொடுக்கின்றன.

நில விரிப்புக்கள் எமது நிரந்தர வீடாகின-கிடங்குகள்
இப்போ எம அரண்மனையாகின இருட்டை
கிழித்துக்கொண்டு வரும் குண்டுகளை
தமிழ் தலைகள் வலிய இழுத்துக்கொண்டன
காந்தம் பொருத்தியவை போல..
தாயின் வயிற்றில் எஞ்சியிருந்த கருவும் தன்
உறவுகள் படும் இன்னலை கண்டு கதறமுன்
இருப்பு தவறு என்பதை உணர்த்திவிட்டது குண்டு.

சிதைந்த உடல்களை சுற்றி காகங்கள்
சத்தமிட்டு சாவை அறிமுகம் செய்து வைக்கின்றன
ஓடிஓடி அலுத்துவிட்ட வளர்ப்பு நாய்கள்
ஓரமாக நின்று ஊழையிடுகின்றன் வேண்டாம்
நமக்கினி வாழ்வு என்று.பறந்து பறந்து
அலுத்து விட்ட நாரைக்கொக்குகள்
விடைபெறுகின்றன தாய்நாட்டிடம் - எஞ்சியிருக்கும்
நாரை குஞ்சுகள் கூடுகளை எறிந்துவிட்டு
இறகின் வரவுக்காக கொப்பில் அமர்ந்து காத்திருகின்றன

மேச்சல் தரையில் இரத்தத்தால்
முளைத்த புல்லை மணந்தபடி
மனிதகுணம் இனி எம்மில் மலர்ந்துவிடுமோ
என்றஞ்சி உணவை மறுக்கின்றன் மந்தைகள்
கால்களையும் கைகளையும் இழந்த
மந்தைகள் மருத்தவ சிகிச்சைக்காக
ஜமலோகம் செல்கின்றன மணத்தபடி

இரத்தத்தை புசித்து அலுத்துவிட்ட
எறும்புக்கூட்டங்கள் ஒருபொழுதாவது
ஓய்விலிருப்போம் என்று நகரமுடியவில்லை!
கட்டெறும்பும் கறுத்தெறும்பும் கூடி யோசிக்கின்றன
குருதியை முட்டாது தப்புவது எப்படி என்று.
முடிவில் அவைகளும் குருதியால்
அடித்துச்செல்லப் பட்டன.

Thursday, May 7, 2009

சொல்லும் வார்த்தை



மாரிக்காலமழை சொன்னது
சுட்டு பொசுங்கும் தேசத்தை
மீளவும் உயிர் கொடுக்க
முடியவில்லை என்று

நான்புகமுன்பே அங்கு
ஒளிகள் பிறந்துவிட்டன
கூரைகளில் காலை
கதிரவன் சொன்னது

தேய்ந்துபோகமுன் முழுமையாய்;
பார்த்தேன் தேசத்தை நேற்று
தாங்கமுடியவில்லை சுடுகாடான
பூமியை பார்க்க தேய்ந்துவிட்டேன்
பிறையாய் இன்று நிலா சொல்கிறது.

கடலலையும் அமைதியாகிவிட்டது
மனிதர்களெல்லாம் நிமிர்நததால்
பிணமாகி நிலத்தினில் சுருள
எனக்கேன் எழுச்சி என்று

மனிதர்கள் சொன்னார்கள்
நாங்கள் இருக்கிறோம் எங்களிடம்
அங்கங்கள் இல்லை இரும்பு
கம்பிகளும் மரத்தடிகளும்
பிளாஸ்ரிக் சேர்வைகளும் எமக்கு
அங்கங்களானதால் நோக்களுமில்லை
வேதனைகளுமில்லை என்று