Wednesday, June 24, 2009

முறட்டு இரவு


போதையில் வந்த பொல்லாதவர்
கைகளில் எங்கள் முகங்கள்
கலந்தாலேசிக்கப்பட்டன - பின்பும்
நெழிந்த பாத்திரங்களை பழித்த
கன்னங்களுடன் யாக சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட நாங்கள் - அங்கும்
யேசுநாதரின் வாக்குறுதியைக்
காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.


சுயநிலை அறிய மதுக்குடல்கள்
மறுத்துவிட்டன இப்போ வெறி
அரக்கமுகங்களில் பளபளத்தது
மத்தியானம் வரை சோற்றுக்காக சாய்த
கைகள் மாலையில் மதுக்கோப்பைகளில்
மாறிவிட்டன - இரவோடு
மதுக்கர மனிதர்கள் நல்ல சிற்பங்களை
எங்கள் முகத்தில் செதுக்கிவிட்டு நிமிர்ந்தனர்

குருதிகளும் கொப்பளங்களும் கொண்ட
எங்கள் மனங்கள் அடுத்தநாள் காலையில்
போசாக்கு நிரம்பியிருந்தன கூடவே
முரட்டுத்தனங்களும் புகுத்தப்பட்டன

மது மனிதர்கள் தூங்கிவிட்டனர் சாமத்தில்
வயிறு தண்ணீருக்காக அழுதுகொண்டது
குருதிகள் இயல்பாகிவிட்டன அவர்களின்
கரங்கள் மட்டும் எம்மைவிட்டு அகலவில்லை

நேற்றய நிகழ்வாகிவிட்ட போதும் பிழை
என்றும் சரியென்றும் பலர் கதைத்ததை
பிழைதிருத்தி சரியென சித்திரம் வடிக்க
நண்பர்களின் மானாடுகள்

கடைசியில் பிழைகள் மதுக்களில்
மாற்றப்பட்டன இப்போ
விரிந்த முகங்களுடன் அவர்களும்
நாங்களும்….

பகையொன்றுமில்லை முன்னரே
பதவிகள் வகுத்த சட்டங்கள் எங்கள்முன்
பலிகொடுக்கப் பட்டதால் இன்னும்
பதிலற்ற முகங்களே எங்கள்முன்…

Tuesday, June 16, 2009

கொலைக்கருவிகள்




பொசுக்கிவிடுங்கள் நல்ல
நகரத்தை அங்குதான்
பொன்விளைகின்றது என்பதால்
அறுத்து விடுங்கள் தொடுப்புகளை
படகுகள் கரைசேராது நாடு
கடந்து போகட்டும்

துடைத்து விடுங்கள் அறிவு
கிண்ணங்களை அவர்கள்
இருப்பதால்தான் உண்மை
விழுங்கப்படாது போகிறது


கூட்டிவாருங்கள் பேய்களையும்
பிசாசுகளையும் பிணங்களின்
மேல் இருந்து பிரசாரம் செய்ய
நாடு நல்ல நிலைபெற்றதென்று

விடைபெறுவார்கள் அறிவு
கிண்ணங்களும் அருள்நகரங்களும்
குருதி தோய்ந்த முகத்துடன்

பத்திரிகைகளே!வானொலிகளே!
தெலைக்காட்சிகளே பேசுங்கள்
உங்களை தொலைத்துவிடுபவர்
பற்றியல்ல உங்களிடம்
இருந்து பிரிந்தவர்கள் பற்றி!

குரு முதல் குரோதன் வரை
சட்டம் சனமென்ற நாட்டில்
கொலைக்கருவிகள் நீதி
தராசுகளில் ஏறி நீதிபதிகளை
கேட்டன வேண்டுமா
உன் உயிர் என்று.